ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிற மொழிகளுக்கும் மரியாதை கொடுங்கள்: ஹிந்தி பேசுபவர்களுக்கு குடியரசுத் தலைவர் கோரிக்கை

ஹிந்தி மொழி பேசுபவர்கள், தங்கள் மொழியைப் போல பிற மொழி பேசுபவர்களையும் மதித்து, பிற மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :14 செப்டம்பர் 2017, 11:05 am


புது தில்லி: ஹிந்தி மொழி பேசுபவர்கள், தங்கள் மொழியைப் போல பிற மொழி பேசுபவர்களையும் மதித்து, பிற மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த வலியுறுத்தியுள்ளார்.

ஹிந்தி தின விழாவில் கலந்து கொண்டு பேசிய ராம்நாத் கோவிந்த், ஹிந்தி நமது ஆட்சி மொழியாக இருந்த போது கூட, தற்போதும் நாட்டின் பல பகுதிகளில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையில் ஹிந்தி மொழியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை எடுக்க போராட்டம் நடத்தப்பட்டது, தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் போன்றவை, பிற மொழி பேசுபவர்கள் மீது ஹிந்தி திணிக்கப்படுவதாக அவர்கள் கருதுவதே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஹிந்தி பேசும் நபர்கள், தமிழர்களைப் பார்த்ததும் வணக்கம் என்றும், சீக்கியர்களிடம் 'சத் ஸ்ரீ அகல்' என்றும், முஸ்லிம் மக்களிடம் 'அதாப்' என்ற வார்தைகளைக் கூறி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.

இதே நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹிந்தி மொழி வளர்ச்சி அடைய, ஹிந்தி பேசுபவர்கள், பிற மொழியில் இருக்கும் வார்த்தைகளையும் அறிந்து கொண்டு பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.