தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஹெல்மெட் அணிந்த கொலையாளி, வெளிநாட்டுத் துப்பாக்கி: சிசிடிவி கேமராவில் பதிவான கௌரி லங்கேஷ் படுகொலை

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் கொலைச் சம்பவம் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. 

News image
Updated On :6 செப்டம்பர் 2017, 9:56 am


பெங்களூர்: மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் கொலைச் சம்பவம் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. 

சமூக ஆர்வலரும், மூத்த பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

பெங்களூரில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கியவாதியுமான கெளரி லங்கேஷ் (55)  பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவந்தார். செவ்வாய்க்கிழமை காரில் வெளியே சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டுக்கு திரும்பிய போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கௌரியை கைத்துப்பாக்கியால் 7 முறை சுட்டுள்ளனர். 

இதில் நெற்றி, மார்பு உள்ளிட்ட இடங்களில் 3 குண்டுகள் பாய்ந்ததில் நிகழ்விடத்திலே கெளரி லங்கேஷ் உயிரிழந்தார். தகவலறிந்த ராஜராஜேஸ்வரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
 

Story image

உயிரிழந்த கெளரி லங்கேஷ், மூத்த பத்திரிகையாளர் பி.லங்கேஷின் மகள்.  இடதுசாரி சிந்தனை கொண்ட இவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துகளைக் கூறி வந்தார். கர்நாடகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமலாக்க ஆதரவு தெரிவித்தவர்.

முதற்கட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளிகளை அடையாளம் காண காவல்துறை முயன்றது. வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் கதவருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் எடுத்தனர். இதில் ஒரு காமிராவில் படுகொலை சம்பவம் முழுவதும் பதிவாகியுள்ளது.

அதில், கௌரி லங்கேஷ் மிகவும் அருகே  இருந்து ஹெல்மெட் அணிந்த நபர் துப்பாக்கியால் சுடுகிறார். தப்பிச் செல்ல முயன்று இரண்டு அடிகளை எடுத்து வைத்த கௌரி நிலைகுலைந்து விழுகிறார். கொலையாளி கருப்பு நிற மேலாடை அணிந்திருப்பதும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை கொலைக்கு பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

 ஆனால், அப்பகுதியில் வெளிச்சம் மிகவும் குறைவாக இருந்ததாரும், கொலையாளி ஹெல்மெட் அணிந்திருப்பதாகவும், கொலையாளிகளை அடையாளம் காண முடியவில்லை. அந்த விடியோ காட்சிகள் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதோடு, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் பற்றி அக்கம்பக்கத்தினர் கூறுகையில், பட்டாசு அல்லது துப்பாக்கி வெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டு வெளியே வந்தோம். அப்போது கௌரி ரத்த வெள்ளத்தில் வீட்டு வாயிலில் கிடந்தார். இரண்டு மோட்டார் பைக்குகளின் சத்தம் கேட்டது என்கிறார்கள்.

Story image

முதற்கட்ட தகவலில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 3 கொலையாளிகள், கௌரியை மிகவும் அருகில் வைத்து சுட்டுள்ளனர். கௌரியின் உடலில் 3 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்த நிலையில், 4 தோட்டாக்களை சம்பவ இடத்தில் இருந்து காவல்துறையினர் கைப்பற்றினர்.

கொலையாளிகளைக் கண்டுபிடித்து அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், விசாரணை தீவிரமடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.