பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

தில்லியில் வாகனக் கட்டுப்பாட்டு திட்டத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை! 

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசின் அளவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாநில அரசு கொண்டு வர உத்தேசித்திருந்த வாகன கட்டுப்பாட்டு திட்டத்துக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளளது.

News image
Updated On :10 நவம்பர் 2017, 9:53 am

புதுதில்லி: தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசின் அளவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாநில அரசு கொண்டு வர உத்தேசித்திருந்த வாகன கட்டுப்பாட்டு திட்டத்துக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளளது.

தில்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசின் அளவானது அபாயக் கட்டத்தினை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.அதேபோல் தில்லி உயர் நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் அதிகரித்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல்வேறு ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் வழங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தில்லியில் வரும் ஞாயிறு முதல் வாகனங்களின் பதிவெண் அடிப்படையிலான கட்டுப்பாட்டு திட்டத்தினைக் கொண்டு வர அம்மாநில அரசு உத்தேசித்திருந்தது.

இந்நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது இன்று ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி மாநில அரசு கொண்டு வர உத்தேசித்திருந்த வாகன கட்டுப்பாட்டு திட்டத்துக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளளது. இந்த திட்டத்தின் செயல்திறன் மற்றும் ஆக்கப் பூர்வ விளைவுகள் தீர்ப்பாயத்துக்கு திருப்தி ஏற்படும்படி நிரூபிக்கப்டாதவரை அதனை செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.