/

நில மோசடி: லாலு பிரசாத் வீடு உட்பட 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

ரூ.1000 கோடி அளவுக்கு நில மோசடி வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் வீடு உட்பட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :16 மே 2017, 5:50 am


புது தில்லி: ரூ.1000 கோடி அளவுக்கு நில மோசடி வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் வீடு உட்பட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

லாலுவின் மகன் குப்தா மற்றும் தில்லி, குர்கான், ரேவரி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்கள் வீடு, அலுவலகம் என பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்ட பினாமி நிலத்தை சட்டத்துக்கு விரோதமாக மாற்றிய வழக்கில் தொடர்புடைய பலரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் சுமார் 100 வருமான வரித்துறை அதிகாரிகளும், ஏராளமான காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

லாலு பிரசாத் யாதவ், அவரது மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான மிஸா பார்தி, பிகார் அமைச்சர்களாக இருக்கும் அவரது இரண்டு மகன்களும் ரூ.1000 கோடி அளவுக்கு பினாமி சொத்துகளை மாற்றியதாக மாநில பாஜக குற்றம்சாட்டியிருந்தது. இந்த மோசடி குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் பெயரில் இயங்கும் பல நிறுவனங்கள், ஊழியர்கள் இல்லாமல், எந்த தொழிலும் செய்யாமல், லாப நட்டம் இல்லாமல் இயங்குகின்றன. இவை அனைத்து நிலம் மோசடி செய்யவே துவங்கப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.