பனாஜி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோவா மாநில சட்டசபையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு கரையேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடைபெற்று முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உண்டானது. மொத்தமுள்ள 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் 13 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, சிறிய கட்சிகள் மற்றும் சில சுயேட்சைகளின் ஆதரவைப் பெற்று, பெரும்பாண்மையான 21 இடங்கள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்து, ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. கடந்த ஞாயிறன்று ஆளுநர் மிருதுளா சின்ஹா முதல்வராக தேர்வு செய்யப்பட்ட மனோகர் பாரிக்கரை ஆட்சி அமைக்க அழைத்தார்.மறுநாள் திங்களன்று மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜ ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டது.
இதனிடையே அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாக பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் சந்திரகாந் கவ்லேகர் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கோவா முதல்வர் பாரிக்கர் இன்று சட்டமன்றத்தில் தனது பெரும்பாண்மை பலத்தை நிரூபிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.
இதனிடையே தனித்த பெரிய கட்சியாக வென்ற பொழுதிலும் ஆட்சியமைப்பதில் சுணக்கம் காட்டியதாக சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பின்னர் மத்தியிலேயே அதிருப்தியை சம்பாதித்துள்ள கோவா மாநில காங்கிரஸ் கட்சியானது, தற்போது தாங்கள் வெற்றி பெற வேண்டிய நான்கு இடங்களைப் பெற சிறிய கட்சிகள் சிலவற்றிடம் வாக்கெடுப்பில் தங்களுக்கு ஆதரவு தருமாறு கோரி, தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இன்று காலை கூட உள்ள கோவா சட்டமன்ற கூட்டத்தில் முதலில் தேர்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார்கள். பின்னர் மாலை ஐந்து மணி அளவில் நமபிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தீவிர கடைசி கட்ட முயற்சியின் காரணமாக மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு கரையேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

