தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நேரு குடும்பத்தால் தான் காஷ்மீரில் பிரச்னை: பாஜக சாடல்

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரச்னனைகளுக்கு நேருவும் அவரது குடும்பமும் தான் முக்கிய காரணம் என பாஜக தலைவர் சுதான்ஷூ திரிவேதி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினார். 

News image
Updated On :22 ஜூலை 2017, 9:56 am

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரிவினைவாத பிரச்னைகளுக்கு ஜவஹர்லால் நேரு குடும்பமும், ஃபரூக் அப்துல்லா குடும்பமும் தான் முக்கிய காரணம் என பாஜக தலைவவர்களில் ஒருவரான சுதான்ஷூ திரிவேதி குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஃபரூக் அப்துல்லாவின் கருத்து மிகவும் மோசமாகவும், கண்டிக்கத்தக்க வகையிலும் உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இதுவரை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவதற்கு நேரு மற்றும் அவரது குடும்பமும், ஃபரூக் அப்துல்லா குடும்பமும் தான் முக்கிய காரணம் என்றார்.

அவரது கருத்தை சக பாஜக தலைவர்களில் ஒருவரான திலீப் கோஷ் வழிமொழிந்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது:

ஃபரூக் அப்துல்லா அரசியலுக்கு தேவையற்றவர். அவரது கருத்துக்கள் எல்லாம் காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவானதாகவே இருக்கும். எனவே அவரது கருத்துகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. 

அவரது கருத்துக்களை போலவே ஃபரூக் அப்துல்லாவையும் நம்பக் கூடாது. அது இந்திய இறையாண்மைக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவின் உதவியை இந்தியா நாட வேண்டும் என ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.