தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மகாராஷ்டிராவில் மாயாஜாலம்: உச்ச நீதிமன்ற தடைக்குப் பிறகும் மதுபான விற்பனை வருவாய் உயர்வு

நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுபானக் கடைகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்தத் தடையால் பல மாநிலங்களில் மதுபான விற்பனையும், வருவாயும் சரிவடைந்தது.

News image
Updated On :12 ஜூலை 2017, 11:46 am


மும்பை: நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுபானக் கடைகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்தத் தடையால் பல மாநிலங்களில் மதுபான விற்பனையும், வருவாயும் சரிவடைந்தது.

ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தின் கலால் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கை வேறுமாதிரியாக உள்ளது. அதாவது, உச்ச நீதிமன்றத் தடையால், அம்மாநிலத்தின் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயானது குறையாமல் உயர்ந்திருக்கிறது.

மதுபான விற்பனை மற்றும் வருவாய் குறித்த அறிக்கையில், ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிர மாநிலத்தின் வருவாய் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு சரிவடைந்தது. அதே சமயம், நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.2,800 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் பெற்ற வருவாய் ரூ.2,640 கோடியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 15,500 மதுபானக் கடைகள் மூடப்பட்டன். இதனால் மதுபான விற்பனையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டது. 

அதாவது, 65% மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் நாங்கள் எதிர்பார்த்ததை விட, வருவாய் ஓரளவுக்குத்தான் சரிந்துள்ளது என்று கூறியுள்ளார் கலால்துறை அமைச்சர் சந்திரஷேகர் பவன்குலே.

மேலும், நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், இயங்கி வந்த மதுபானக் கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்ததே, வருவாய் இழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்படக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.