ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வடக்கு பண்டிபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் ஹைஜின் கிராமபகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் கிராமபகுதிக்கு விரைந்து சென்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி யார்? எந்த இயக்கத்தை சேர்ந்தவன்? என்பது உடனடியாக தெரியவரவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுகிறது. பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகேயுள்ள ராணுவப் பொறியாளர்கள் பிரிவு முகாம் மீது பயங்கரவாதிகள் நேற்று திங்கள்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர். இதில், அந்த முகாமில் வேலை பார்த்து வந்த 3 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அவர்கள் எல்லை வழியாக ஊடுருவி வந்திருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ராணுவத்தினரும், போலீஸாரும் அப்பகுதியை சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் அக்னூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


