நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தயாநிதிமாறன் மேல் குற்றசாட்டு பதிவு செய்தல் தொடர்பான மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு!

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் மேல் குற்றசாட்டு பதிவு செய்வது   தொடர்பான மனு மீதான தீர்ப்பை ஜனவரி 17-ஆம் தேதிக்கு  தள்ளிவைத்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:43 am

PTI

புதுதில்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் மேல் குற்றசாட்டு பதிவு செய்வது   தொடர்பான மனு மீதான தீர்ப்பை ஜனவரி 17-ஆம் தேதிக்கு  தள்ளிவைத்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவைச் சேர்ந்த தயாநிதிமாறன் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பொழுது பொழுது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு மிரட்டி குறைந்த விலைக்கு விற்க வைத்ததாகவும், அதற்கு பதிலாக அவர்கள் குடும்ப நிறுவனமான சன் குழுமத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.742.58 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் குற்றசாட்டு எழுந்தது.

இதனை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாநிதி மாறன் மட்டும் இல்லாது அவருடைய மனைவி, சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் நிறுவன உயர் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டியது. போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தது.

சி.பி.ஐ நீதிமன்றத்தில் இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கில் தயாநிதிமாறன் மீது குற்றசாட்டு பதிவு செய்வது தொடர்பான வழக்கில் மனு மீதான தீர்ப்பை ஜனவரி 17-ஆம் தேதிக்கு  தள்ளிவைத்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.