பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

நாடு முழுவதும் பட்டாசுகளுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறுவன் வழக்கு!

நாடு முழுவதும் பட்டாசுகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறுவன் ஒருவன் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   

News image
Updated On :1 டிசம்பர் 2017, 7:36 am

புதுதில்லி: நாடு முழுவதும் பட்டாசுகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறுவன் ஒருவன் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   

உச்ச நீதிமன்றத்தில் அர்ஜுன் கோபால் என்னும் சிறுவன் அவனது தந்தையும் வழக்கறிஞருமான கோபால் ஷங்கரநாராயணன் மூலம் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளான். அதில் நாடு முழுவதும் பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் வெடித்தல் ஆகியவற்றுக்கு தடை கோரியுளான். இதில் விவசாய நிலங்களில் சுள்ளி உள்ளிட்ட விவசாய உபரிப்பொருட்களை எரிப்பதற்கான தடையும் அடங்கும்.

இந்த வழக்கானது நீதிபதிகள் சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

காற்று மாசு ஏற்படுவதால் பட்டாசுகளைத் தடை செய்யக் கோரும் இதே போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முன்பும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.