தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மோடியின் சுதந்தர தின விழா உரைக்காக வந்து குவிந்த 12 ஆயிரம் யோசனைகள்

இந்திய சுதந்தர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் உரைக்காக, ஏராளமான மக்கள் தங்களது யோசனைகளை வாரி வழங்கியிருந்தனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:39 pm

DIN

புது தில்லி: இந்திய சுதந்தர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் உரைக்காக, ஏராளமான மக்கள் தங்களது யோசனைகளை வாரி வழங்கியிருந்தனர்.

தனது சுதந்தர தின விழா உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து யோசனைகள் அளிக்கலாம் என்று பொதுமக்களிடம் மோடி கேட்டிருந்தார்.

இதையடுத்து சுமார் 12 ஆயிரம் பேர் தங்களது ஆலோசனைகள், யோசனைகளை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தனர்.

அதில், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், மேம்படுத்தப்பட்ட பொருளாதாரம், ஊழலற்ற ஆட்சி போன்ற விஷயங்கள் அடங்கிய எண்ணற்ற யோசனைகள் இடம்பெற்றிருந்தது. தனித்திறமையை வளர்க்க இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளிப்பது குறித்தும் யோசனை வழங்கப்பட்டிருந்தது.

ராஜேஷ் ஷர்மா என்பவர், தனியார் பள்ளிகளில் கருப்புப் பணம் அதிகமாக புழங்குவதாகவும், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

நிதிஷா அனேஜா என்பவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற சலுகைகளைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பல்லவி பாரதி என்பவர், உயர்கல்வி பாடத்திட்டங்கள் கடந்த 20 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளன. அவற்றை உலகத் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

முன்னதாக, மக்களின் யோசனைகளைக் கேட்டிருந்த பிரதமர் மோடி, "ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் கொடியேற்றிய பிறகு உரையாற்றுவேன். அது என் தனி ஒருவனின் குரலாக இருக்கக் கூடாது. உங்கள் 125 கோடி மக்களின் ஒருமித்த குரலாக இருக்க வேண்டும்" என்று வானொலியில் தனது மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.