தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இனிப்புகளை பகிர்ந்து கொண்ட இந்திய - சீன வீரர்கள்

நாட்டின் 71-ஆவது சுதந்திர தினம் அனைத்து மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சிக்கிமில் அமைந்துள்ள இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் பரஸ்பரம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:40 pm

DIN

நாட்டின் 71-ஆவது சுதந்திர தினம் அனைத்து மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சிக்கிமில் அமைந்துள்ள இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் பரஸ்பரம் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னைகள் போர்ச் சூழலாக மாறியுள்ள தருணத்தில் நடந்துள்ள இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியா, பூடான் மற்றும் சீனாவின் எல்லையாக விளங்கும் டோகலாமில் அத்துமீறி சாலை அமைத்து வரும் சீனப் படைகள், எல்லை தாண்டி வருவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்நிலையில், சிக்கிம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி அண்மையில் நுழைந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும், அந்நாட்டுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கு நடுவே இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்ற கொடி அமர்வுக் கூட்டம் சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்றது. இதில் இருநாட்டு பாதுகாப்புப் படை உயரதிகாரிகளும் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
இந்த சூழலில், சுதந்திர தினத்தன்று சம்பிரதாயமாக இரு நாட்டு எல்லைப் படையினருக்கும் இடையே நடைபெறும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவில்லை. எனினும், இந்திய - சீன எல்லைப் படையினர் பரஸ்பரம் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.