ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உத்தர பிரதேச சட்டசபை வளாகத்தில் ஒரு கிலோ தக்காளியை ரூ.10-க்கு விற்ற காங்கிரசார்!

தக்காளி விலை கட்டுக்கு அடங்காமல் பெருகி வருவதனை கண்டிக்கும் விதமாக, உத்தர பிரதேச சட்டசபை வளாகத்தில் கடைகள் அமைத்து ஒரு கிலோ தக்காளியை காங்கிரசார் ரூ.10-க்கு விற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2017, 1:44 pm

லக்னோ: தக்காளி விலை கட்டுக்கு அடங்காமல் பெருகி வருவதனை கண்டிக்கும் விதமாக, உத்தர பிரதேச சட்டசபை வளாகத்தில் கடைகள் அமைத்து ஒரு கிலோ தக்காளியை காங்கிரசார் ரூ.10-க்கு விற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் தற்பொழுது தக்காளி விலை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்குமுன்பு வரை கிலோ ரூ.100-க்கு அதிகமாக தக்காளி விற்ற சம்பவங்கள் எல்லாம் நடந்தது. இந்திய மக்களின் சமையலறைத் தேவைகளில் முக்கியமானதான தக்காளியின் விலையேற்றத்தினை கண்டிக்கும் விதமாக, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸார் வினோதமான போராட்டம் ஒன்றை இன்று நடத்தினர்.

அதன்படி சட்டசபை வளாகத்தில் சிறிய அளவில் கடைகளை உருவாக்கி, அங்கு தக்காளிகளை கிலோ ரூ10-க்கு விற்பனை செய்தனர். இந்த போராட்டம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் சைலேந்திர திவாரி கூறியதாவது:

நடுத்தர மக்களுக்கு பெரிதும் பயன்படும் காய்கறியான தக்காளியினை குறைந்த விலைக்கு அவர்களுக்கு கொடுக்கும் விதமாகவே, இந்த போராட்டம் நடந்தது. அத்துடன் மத்திய அரசு பொதுமக்களுக்கு வாக்களித்தபடி 'நல்ல தினம்' என்பது இன்னம் வரவில்லை என்பதனை அவர்களுக்கு எடுத்துக் கூறவும் இந்த நிகழ்வு பயன்படுகிறது.

இவர் திவாரி தெரிவித்தார்.

மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் இந்த போராட்டமானது விரைவில் மற்ற இடங்களிலும் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.