ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பத்திரிகையாளர் கொலை: சஹாபுதீன், லாலு மகன் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிகாரில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் சஹாபுதீனுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Updated On :23 செப்டம்பர் 2016, 9:10 am

புது தில்லி: பிகாரில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் சஹாபுதீனுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொலையுண்ட பத்திரிகையாளரின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பிகார் போலீஸாரை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பிகாரின் சிவான் பகுதியில் அமைந்துள்ள நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜ்தேவ் ரஞ்சன் கடந்த மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் சந்தேகிக்கப்படும் இருவர் ஆர்ஜேடி மூத்த தலைவர் சஹாபுதீன், மாநில அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து ராஜ்தேவ் ரஞ்சனின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, இது குறித்து பதில் அளிக்குமாறு தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் சஹாபுதீனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.