நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பெல்லட் ரக துப்பாக்கிகளுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: ஜம்மு-காஷ்மீர் நீதிமன்றம் உத்தரவு

காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது பெல்லட் ரக துப்பாக்கிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரும் மனுவை ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் வன்முறையில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் சிறிய ரக கூர்மையான தோட்டக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகளுக்கு (பெல்லட்) தடை விதிக்கக் கோரும் மனுவை ஜம்மு - காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவும், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காகவும் போலீஸார் பெல்லட் ரக துப்பாக்கியால் சுடுவது வழக்கமாக உள்ளது.

இந்த வகை தோட்டாக்களால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், கண்களில் பட்டால் கண்கள் பார்வைத் திறனை இழந்துவிடுகின்றன. இதனால் இதைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் மனுதாக்கல் செய்தது.

இந்த மனு ஜம்மு- காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என். பால் வசந்தகுமார் மற்றும் நீதிபதி அலி முகமது மக்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பெல்லட் ரக துப்பாக்கிகளுக்கு மாற்றை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னர், அந்த வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை தடை செய்ய விரும்பவில்லை.

ஜம்மு- காஷ்மீரில் போராட்டக்காரர்களால் வன்முறை நீடிக்கும் நிலையில் போலீஸார் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.

எனவே, பெல்லட் ரக துப்பாக்கிகளுக்குத் தடை கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.