நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

உரி தாக்குதல் முடிவல்ல: காஷ்மீரில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம்?

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியல் உள்ள ராணுவ படைப்பிரிவு தலைமையகத்தின் மீது நேற்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியல் உள்ள ராணுவ படைப்பிரிவு தலைமையகத்தின் மீது நேற்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த பயங்கரவாத சம்பவத்தினைத் தொடர்ந்து, இன்னும் சில பயங்கரவாதக் குழுக்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பதுங்கியிருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

சுமார் மூன்று குழுக்கள் ஒன்றாக இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருக்க வேண்டும், ஒவ்வொரு குழுவிலும் மூன்று அல்லது நான்கு பேர் இருப்பார்கள். இதில் ஒரு குழுதான் உரி பகுதியில் தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. மற்றொரு குழு சில நாட்களுக்கு முன்பு பூஞ்ச் பகுதியில் தாக்குதல் நடத்தியது.

எனவே, மூன்றாவது குழு ஏதேனும் ஒரு பகுதியில் பதுங்கியிருக்க வேண்டும். இது ஸ்ரீநகரையோ அல்லது மாநிலத்தின் வேறு பகுதியிலோ தாக்குதல் நடத்த திட்டமிடலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய எல்லைக்கு அப்பால் சுமார் 200 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் எந்த நேரத்திலும் எலலைக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடலாம் என்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தலைமை இயக்குநர் கே. ராஜேந்திர குமார் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.