நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அருணாச்சலில் சம்பவம்: தலையில் குண்டுகள் பாய்ந்து காரில் சடலமாக மீட்கப்பட்ட காவல் அதிகாரி

அருணாச்சலப் பிரதேச காவல்துறையைச் சேர்ந்த துணை ஆய்வாளர், தலையில் குண்டுகள் பாய்ந்து தனது சொந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


இடாநகர்: அருணாச்சலப் பிரதேச காவல்துறையைச் சேர்ந்த துணை ஆய்வாளர், தலையில் குண்டுகள் பாய்ந்து தனது சொந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடாநகர் - நஹர்லகான் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் ஓட்டுநர் இருக்கையில், தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில், துணை ஆய்வாளர் ஹானோ சடங் சடலமாக மீட்கப்பட்டார்.

இன்று காலை 7.30 மணிக்கு இடாநகரில் இருந்து டொய்முக் செல்ல தனது காரில் புறப்பட்ட சட்டங், காலை 8 மணியளவில் பிணமாக மீட்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

காரிலும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.