பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

விறகு வாங்க பணமில்லை... குப்பைகளைக் கொண்டு மனைவி உடலை தகனம் செய்த கணவர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில், உயிரிழந்த தனது மனைவியின் உடலை நல்லடக்கம் செய்ய பணமில்லாத ஏழை ஒருவர் குப்பைகளைக் கொண்டு உடலை எரித்த சம்பவம் தீயாகப் பரவி வருகிறது.

News image
Updated On :6 செப்டம்பர் 2016, 9:21 am

நீமுச்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், உயிரிழந்த தனது மனைவியின் உடலை நல்லடக்கம் செய்ய பணமில்லாத ஏழை ஒருவர் குப்பைகளைக் கொண்டு உடலை எரித்த சம்பவம் தீயாகப் பரவி வருகிறது.

மத்தியப் பிரதேசம் நீமுச் பகுதியைச் சேர்ந்த ஜகதீஷ் பில்லின் மனைவி நேஜி பாய் (67) உடல் நிலை பாதித்து கடந்த வாரம் உயிரிழந்தார்.

தனது மனைவியின் மரணத்தை விட, அவரது இறுதிச் சடங்குக்கு தன்னிடம் போதிய பணமில்லை என்ற வருத்தம் அவரை வாட்டியது.

உடனடியாக நகராட்சி அலுவலகங்களுக்குச் சென்று எனது மனைவியின் இறுதிச் சடங்குக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன். யாரும் உதவ முன்வரவில்லை. கவுன்சிலர்களையும் கேட்டுப் பார்த்தேன். யாரும் உதவவில்லை.

என் மனைவி உடலை எரிக்கத் தேவையான விறகுக் கட்டைகள் வாங்க ரூ.2,500 செலுத்துமாறுக் கூறினார்கள். ஆனால், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அவர் உயிரிழந்து 12 மணி நேரமாக எவ்வளவோ போராடியும் எந்த உதவியும் கிடைக்காததால் இறுதியாக, குப்பைகள், காகிதங்கள், கட்டைகளைப் பொறுக்கி அவற்றைக் கொண்டு என் மனைவியின் உடலை எரித்தேன்.

மரம்வெட்டி பிழைக்கிறோம். அது எங்கள் வாழ்வாதாரத்துக்கே போதவில்லை. எங்கள் நிலையைக் கேட்க யாரும் இல்லை என்று வருத்தத்தோடு கூறினார் ஜெகதீஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.