கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

காஷ்மீரில் அமைதி திரும்பும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்பும் என்று தான் நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:01 am

PTI


காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்பும் என்று தான் நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர், பலதரப்பட்ட கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த காஷ்மீர் சென்றுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிரிவினைவாதிகள் அழைக்கப்பட்ட போதும், அவர்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ஹுரியத் தலைவர்கள் காஷ்மீரத்தைத் தான் விரும்புகிறார்களே தவிர, மனித நேயத்தை அல்ல.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையை தவிர்த்திருப்பதன் மூலம், அவர்கள் ஜனநாயகத்தை நம்பவில்லை என்பது தெரிகிறது.

காஷ்மீர் இந்தியவின் ஒரு பகுதி என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை. இந்தியாவின் ஒரு பகுதியாகவே காஷ்மீர் தொடர்ந்து இருக்கும். காஷ்மீரில் மீண்டும் அமைதி திரும்ப மத்திய அரசு, மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் ராஜ்நாத் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.