நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

குப்வாரா ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

குப்வாரா மாவட்டம் லாங்கேட் பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது இன்று காலை 5 மணியளவில் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனடியாக ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து பயங்கரவாதிகள் தப்பியோடினர்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் இறுதியில், 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.