நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பாகிஸ்தான் பறக்க விடும் பலூன், புறா: ஒரு வகையான 'சைக்காலஜி ஆபரேஷன்'

இந்திய எல்லைக்குள் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பலூனையும், புறாவையும் பாகிஸ்தான் பறக்க விடுவது ஒரு வகையான 'சைக்காலஜி ஆபரேஷன்' என எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகிறார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


ஜம்மு: இந்திய எல்லைக்குள் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பலூனையும், புறாவையும் பாகிஸ்தான் பறக்க விடுவது ஒரு வகையான 'சைக்காலஜி ஆபரேஷன்' என எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகிறார்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியது.

இதனால், இரு தரப்புக்கும் இடையே பதற்றம் நிலவும் நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும், பிரதமர் மோடியை எச்சரிக்கும் வகையிலும் பாகிஸ்தானில் இருந்து பலூன்களும், புறாக்களும் பறக்க விடப்படுகின்றன.

இவற்றை எல்லையோர மக்கள் பார்த்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது ஒரு வகையான சைக்காலஜி ஆபரேஷன். இவற்றைப் பார்க்கும் எல்லையோரம் உள்ள ஜம்மு மற்றும் பஞ்சாப் கிராமப் பகுதியைச் சேர்ந்த மக்கள், மிகுந்த கலக்கம் அடைவார்கள்.

இதனால், எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் இடையே ஒரு வித அதிருப்தி நிலவும், இது அப்பகுதியில் பணியாற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

கடந்த வாரம், பாகிஸ்தானில் இருந்து வந்த புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த பேப்பரில், "மோடிஜி, நாங்கள் 1971 (இந்தியா - பாகிஸ்தான் போர்) நடந்த போது இருந்தது போலவே இருப்போம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இப்போது, நாங்கள் அனைவரும், எங்களது குழந்தைகளும் கூட இந்தியாவுக்கு எதிரான போருக்கு தயாராக உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.