சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மக்களுக்கு நன்மை அளிக்கும் யோசனைகளை தாருங்கள்: எதிர்க்கட்சிக்கு மோடி வேண்டுகோள்

நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட்டு, நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2016, 5:49 am


புது தில்லி: நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட்டு, நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு நன்மை அளிக்கும் பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும். இதற்கு எதிர்க்கட்சியினரும் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நல்ல விவாதங்களை எதிர்பார்க்கிறேன். மக்களுக்கு நல்லதை கொண்டு சேர்க்க அனைவரை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பண ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் சாமானியர்கள் சந்தித்த பிச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.

மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அனைவரும் பங்கேற்று புதிய யோசனைகளையும், திட்டங்களையும் தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.