சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பலாத்காரத்துக்கு உள்ளான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி: கேஜ்ரிவால், சோனியா நேரில் சந்தித்து ஆறுதல்

தில்லியில் கடந்த வாரம் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:21 pm

PTI

புது தில்லி : தில்லியில் கடந்த வாரம் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இன்று காலை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், தில்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தில்லி அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று மதியம் சோனியா காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோர் இல்லாத நிலையில், தனது உறவினர் இல்லத்தில் வசித்து வந்ததாகவும், அவர் கடந்த 17ம் தேதி காணாமல் போன நிலையில், 18ம் தேதி காலை  ரயில் தண்டவாளத்துக்கு அருகே மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.