அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அப்ரூவர் ஆகிறார் கார் ஓட்டுநர்

மும்பையில் நடந்த ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, ஷீனாவின் தாய் இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷாம் ராய் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:14 pm

PTI

மும்பை : மும்பையில் நடந்த ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, ஷீனாவின் தாய் இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷாம் ராய் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஷீனா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள கார் ஓட்டுநர் ஷாம் ராய் அப்ரூவராக மாறி, சம்பவம் குறித்த முழு விவரங்களையும் அளிக்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஷீனா போரா கொலையில் தமக்கு தெரிந்த உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க விரும்புவதாகவும், தனக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷாம் ராய், எந்த மிரட்டலும், அச்சுறுத்தலும் இல்லாமல், தனது சுய விருப்பத்தின் பேரிலேயே அப்ரூவராக மாறியதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து ஷாம் ராயை அப்ரூவராக சேர்த்துக் கொள்வது குறித்து பதில் அளிக்கும்படி சிபிஐ வழக்குரைஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.