அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மல்லையாவை திருப்பி அனுப்ப முடியாது, வேண்டுமானால் சரணடையுமாறு கூறுங்கள்: இங்கிலாந்து

வங்கி மோசடி வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்றும், வேண்டுமானால் அவரை சரணடையுமாறு அறிவுறுத்துங்கள் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:14 pm

PTI

சென்னை: வங்கி மோசடி வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்றும், வேண்டுமானால் அவரை சரணடையுமாறு அறிவுறுத்துங்கள் என  இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

வங்கிகளில் ரூ. 9400 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்த இயலாத தொழிலதிபர் விஜய் மல்லையா மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனிடையே, தொழிலதிபர் மல்லையா இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றுவிட்டார்.

இதையடுத்து அவரது பாஸ்போர்ட்டை முடக்கிய இந்திய அரசு, மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசுக்கு கடிதம் அனுப்பியது.

இரண்டு வாரத்துக்குப் பின்னர் அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ள இங்கிலாந்து அரசு, மல்லையாவை திருப்பி அனுப்ப இயலாது என்றும், வேண்டுமானால் அவரை சரணையுமாறு கூறுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் குடியேற்ற சட்டத்தின்படி, ஏற்கெனவே அங்கு சென்றுள்ள நபர், தொடர்ந்து தங்கியிருப்பதற்கு கட்டயாம் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், மல்லையா விஷயத்தில் இந்திய அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் இங்கிலாந்து அரசு தகவல் தெரிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.