திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

உத்தரகண்டில் மே 10ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்ச நீதிமன்றம்

உத்தரகண்ட் சட்டப்பேரவையில், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :6 மே 2016, 10:05 am

புது தில்லி :  உத்தரகண்ட் சட்டப்பேரவையில், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் கோரும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பங்கேற்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உத்தரகண்டில் ஹரீஷ் ராவத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த நிலையில், திடீரென அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம், குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், மே 10ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.