அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கேரளாவில் இளம் பெண் பலாத்காரம் செய்து கொலை: சந்தேகக் குற்றவாளியின் வரைபடம் வெளியீடு

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் தலித் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின் வரைபடத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:11 pm

PTI

திருவனந்தபுரம் : கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் தலித் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின் வரைபடத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து காவலில் வைத்துள்ள விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த ஏப்ரல் 28ம் தேதி, அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்ததாகக் கூறிய நபரின் வரைபடத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே, காவல்துறை வெளியிட்டுள்ள வரைபடத்தில் இருப்பவரும், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரின் முகமும் ஒன்று போல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்ய காவல்துறை மறுத்துவிட்டது.

பெரம்பாவூர் நகரைச் சேர்ந்த அந்த இளம் பெண், எர்ணாகுளத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். மிக ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்ட அவர், தனது வீட்டில் கடந்த 28-ஆம் தேதி தனியாக இருந்தபோது, மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கூர்மையான ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலின்படி, இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (மே 3) வெளி உலகத்துக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே, இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, அந்த மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஊடகச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, கேரள மாநில பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் நல ஆணையமும், மாநில மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டன.

இதுகுறித்து பழங்குடியின ஆணையத் தலைவரும், நீதிபதியுமான பி.என்.விஜயகுமார், திருவனந்தபுரத்தில், பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "சட்ட மாணவி கொலை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, மே 28-ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள காவல் துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.