பெரம்பாவூர் நகரைச் சேர்ந்த அந்த இளம் பெண், எர்ணாகுளத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். மிக ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்ட அவர், தனது வீட்டில் கடந்த 28-ஆம் தேதி தனியாக இருந்தபோது, மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கூர்மையான ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலின்படி, இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (மே 3) வெளி உலகத்துக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.