அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஹெலிகாப்டர் பேர ஊழல்: விமானப் படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகியிடம் விசாரணை

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம் தொடர்பாக இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் மத்தியப் புலனாய்வு அமைப்பு இன்று விசாரணை நடந்து வருகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:10 pm

PTI

புது தில்லி : ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம் தொடர்பாக இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் மத்தியப் புலனாய்வு அமைப்பு இன்று விசாரணை நடந்து வருகிறது.

மத்தியப் புலனாய்வு அலுவலகத்தில் விசாரணைக் குழு முன்பு இன்று காலை தியாகி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய விமானப் படையின் முன்னாள் துணைத் தளபதி ஜே.எஸ்.குஜ்ராலிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை விசாரணை நடத்திய நிலையில், இன்று எஸ்.பி. தியாகியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அதிமுக்கியப் பிரமுகர்களுக்காக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹெலிகாப்டர்களை வாங்க இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.360 கோடி லஞ்சமாக கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விமானப் படையின் முன்னாள் தலைமைத் தளபதி தியாகி உள்பட 13 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காக விமானப் படையின் முன்னாள் துணைத் தளபதி ஜே.எஸ்.குஜ்ரால் சனிக்கிழமையும், முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி திங்கள்கிழமையும் (மே.2) நேரில் ஆஜராகும்படி சிபிஐ அழைப்பாணை அனுப்பியது.

அதன்படி, தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சனிக்கிழமை குஜ்ரால் விசாரணைக் குழு முன்பு ஆஜரானார்.

 "குஜ்ராலிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு மீண்டும் அழைக்கும்போது ஆஜராகுமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டது' என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

 குற்றச்சாட்டு தொடர்பாக தியாகியிடமும், குஜ்ராலிடமும் கடந்த 2013-ஆம் ஆண்டு விசாரணை நடத்தப்பட்டபோதிலும், இத்தாலி நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட ஆணையின்படி அவர்களிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்வது அவசியம் என சிபிஐ கருதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.