வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வங்கதேசத்தினர் அஸ்ஸாமுக்குள் ஊடுருவுவதை மத்திய அரசு தடுக்கும்: ராஜ்நாத் சிங்

வங்கதேசத்தினர் அஸ்ஸாம் மாநிலத்துக்குள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில், இந்திய - வங்கதேச எல்லையை மத்திய அரசு முழுவதுமாக மூடிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:54 pm

PTI

துலியாஜன்: வங்கதேசத்தினர் அஸ்ஸாம் மாநிலத்துக்குள்  ஊடுருவுவதை தடுக்கும் வகையில், இந்திய - வங்கதேச எல்லையை மத்திய அரசு முழுவதுமாக மூடிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

அஸ்ஸாம் மாநிலம் துலியாஜன் நகரில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் அத்துமீறி ஊடுருவுவது தொடர்கதையாகவே உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், ஊடுருவலுக்கு காரணம் என்ன? அஸ்ஸாம் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி ஊடுருவலை தடுத்து நிறுத்த இதுவரை முயற்சிக்காதது ஏன்? ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழையப் பயன்படுத்தும் இந்திய - வங்கதேச எல்லையை ஏன் முழுவதுமாக அடைக்கவில்லை? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும், எல்லையை மூடுவது குறித்து அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்திய- வங்கதேச எல்லையை முழுவதுமாக அடைத்துவிட்டால், ஊடுருவல்காரர்களால் இந்தியாவுக்குள் நுழைய முடியாது. இதை மத்திய அரசு விரைவில் செய்யும் என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.