வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மேற்குவங்கத்தில் ஆட்சியை தக்கவைக்கிறார் மம்தா: கருத்துக்கணிப்பில் தகவல்

நடைபெறவிருக்கும் மேற்குவங்க சட்டப்பேரவைத் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:54 pm

PTI

கொல்கத்தா: நடைபெறவிருக்கும் மேற்குவங்க சட்டப்பேரவைத் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஏ.பி.பி நியூஸ்'  செய்தி தொலைக்காட்சியும் 'நீல்சன்' அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த முறையைவிட அதிக அளவிலான இடங்களை மம்தா கைப்பற்றுவார் என தெரியவந்துள்ளது.

மேற்குவங்க சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 6 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிக்கட்டத் தேர்தல் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்கு பிரதான எதிர்க்கட்சிகளான இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் கைக்கோர்த்துள்ளன. தேர்தல் கூட்டணி ஏதும் இல்லாத நிலையில், இரு கட்சிகளும் அறிவிக்கபடாத தொகுதி உடன்பாட்டை செய்துள்ளனர். அதாவது, காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் இடதுசாரிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அதுபோல, இடதுசாரிகளுக்கு செல்வாக்கான இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இதுதவிர, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளது.

இந்நிலையில் ஏபிபி நியூஸ் - நீல்சன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன. அதில் மம்தா பானர்ஜி, கடந்த முறையைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 118 பேரவைத் தொகுதிகளில் உள்ள 14,450 பேர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 45 சதவீத வாக்குகளைப் பெற்று 110க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும். கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 39 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்தது.

காங்கிரஸ்-இடதுசாரி முன்னணி 44 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைப் பெறாது என கூறப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நன்றாக இருப்பாத 58 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்துள்ள நிலையில், 16 சதவீதம் பேர் மட்டுமே மோசம் என கூறியுள்ளனர்.

மக்களால் விரும்பப்படும் தலைவர்களில் மம்தா பானர்ஜி முதலிடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாசாரியா இரண்டாம் இடத்திலும், பிரதமர் மோடி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா ஆட்சி நன்றாக இருப்பதாக 29 சதவீதம் பேரும், சராசரியாக இருப்பதாக 42 சதவீதம் பேரும், மோசமாக இருப்பதாக 23 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.