வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அஸ்ஸாம் மக்களை மோடி அவமதித்துவிட்டார்: சோனியா தாக்கு

பிரிவினைவாத, மதவாத சக்திகள் என்று அஸ்ஸாமில் உருவாகியுள்ள பாஜக கூட்டணியைப் பற்றி கருத்துக் கூறிய காங்கிரஸ் தலைவர் சோனியா, அஸ்ஸாம் மக்களை பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:54 pm

PTI

சிவசாகர்: பிரிவினைவாத, மதவாத சக்திகள் என்று அஸ்ஸாமில் உருவாகியுள்ள பாஜக கூட்டணியைப் பற்றி கருத்துக் கூறிய காங்கிரஸ் தலைவர் சோனியா, அஸ்ஸாம் மக்களை பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அஸ்ஸாம் மாநிலம் சிவசாகரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய சோனியா, தான் தேநீர் விற்ற போது அஸ்ஸாம் தேநீரையே விற்றதாகக் கூறிய பிரதமரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தான் ஏழையாக இருந்த போது அஸ்ஸாம் தேநீரை விற்றதாகக் கூறும் மோடி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக என்ன செய்தார்? அவர்களுக்கு நல்ல நாள் என்ற முழக்கத்தோடு மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட மோடி, அவர்களது நல்ல நாளுக்காக என்ன செய்தார் என்று கூறினார்.

வடகிழக்கு மக்களையும், அஸ்ஸாம் மக்களையும் மோடி அவமதித்துவிட்டதாக திரும்பத் திரும்பக் கூறிய சோனியா, பாஜக உடனான கூட்டணிக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் அமைதியும், மேம்பாடும் முற்றிலுமாக நாசமாகிவிடும். மாநிலத்தில் மதவேறுபாடும், பிரிவினைவாதமும் தலைதூக்கும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.