சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

லிபியா குண்டு வெடிப்பு: கேரளாவைச் சேர்ந்த நர்ஸ், மகன் சாவு

லிபியாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் கொச்சியைச் சேர்ந்த செவிலியர் மற்றும் அவரது ஒன்றரை வயது மகன் இறந்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:52 pm

PTI

லிபியாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த செவிலியர் மற்றும் அவரது ஒன்றரை வயது மகன் இறந்தனர்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், கோண்டாடு பகுதியைச் சேர்ந்த சத்தியன் நாயர் மகள் சுனு சத்தியன் (31), ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள லிபியாவில் உள்ள 'ஷாவியா மெடிக்கல் சென்டர்'  என்ற மருத்துவனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் விபின் குமாரும் இங்கு செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த செவிலியர் தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

லிபியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, சுனு வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு மீது நேற்று இரவு வெடிகுண்டு வீசப்பட்டது.

அப்போது வீட்டிலிருந்த சுனுவும், அவரது ஒன்றரை வயது மகனும் நிகழ்விடத்திலேயே இறந்தனர். இச்சம்பவத்தின் போது விபின் குமார் பணிக்குச் சென்றிருந்தார்.

இதனிடையே தனது மகள் இறந்தது குறித்து கேள்விப்பட்ட சுனுவின் தந்தை சத்தியன் கேரள மாநில அரசிடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில் லிபியாவில் மரமணடைந்த தனது மகள் மற்றும் பேரனின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்து வருவதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், லிபியாபில் இந்திய செவிலியர் இறந்தது குறித்து விரிவானத் தகவல்களை தருமாறு லிபியாவுக்கான இந்தியத் தூதரை கேட்டுக் கொண்டுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, லிபியாவில் தவிக்கும் 9 பேரை திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து லிபியாவில் உள்ள இந்திய தூதரகத்தையும், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.