சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மக்கள் ஜனநாயகக் கட்சியின் சட்டமன்றத் தலைவராக மெஹபூபா முஃப்தி தேர்வு

ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டமன்றத் தலைவராக மெஹபூபா முஃப்தி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:51 pm

PTI

ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டமன்றத் தலைவராக மெஹபூபா முஃப்தி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுடன் இணைந்து புதிய அரசு அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை, மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி நேற்று சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஜம்மு-காஷ்மீரில் நீடித்த சிக்கலான அரசியல் சூழல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இன்று மாலை பிடிபி கட்சி எம்எல்ஏ-க்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதில், பிடிபி சட்டமன்றத் தலைவராக மெஹபூபா முஃப்தி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னணி

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து பிடிபி-பாஜக இணைந்து ஆட்சியமைத்தன. பிடிபி கட்சியின் நிறுவனர் முஃப்தி முகமது சயீது மாநிலத்தின் முதல்வரானார்.

இந்நிலையில், முஃப்தி முகமது சயீது அண்மையில் மறைந்ததை அடுத்து, ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு அமைவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கூட்டணி ஆட்சி அமைக்கும் விவகாரத்தில், பிடிபி கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி புதிய நிபந்தனைகளை விதித்ததாகவும், அவற்றை பாஜக ஏற்றுக்கொள்ளாததே ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்படக் காரணம் என்றும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.