பேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கேட்பாரற்றுக் கிடந்த பாகிஸ்தான் மீனவப் படகை கைப்பற்றியது பிஎஸ்எஃப்

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான கட்ச் கடலோரப் பகுதியில், கேட்பாரற்றுக் கிடந்த பாகிஸ்தானின் மீனவப் படகு ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:42 pm

PTI

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான கட்ச் கடலோரப் பகுதியில், கேட்பாரற்றுக் கிடந்த பாகிஸ்தானின் மீனவப் படகு ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கோடேஷ்வர் க்ரீக் என்ற பகுதியில் கேட்பாரற்று கிடந்த படகு ஒன்றை, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பார்த்தனர். எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைப் பார்த்ததும், அந்த படகில் இருந்தவர்கள் அதில் இருந்து தப்பித்து பாகிஸ்தான் பகுதிக்குள் ஓடி விட்டதாகவும், படகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்படும் 5வது படகு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.