பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பி.எப். மீதான வரி - பட்ஜெட் விவாதத்தின் போது தீர்வு: ஜேட்லி

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி மீது அரசு விதிக்கவிருக்கும் வரி குறித்து பட்ஜெட் விவாதத்தின்போது தீர்வு காணப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

News image
Updated On :2 மார்ச் 2016, 9:13 am

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி மீது அரசு விதிக்கவிருக்கும் வரி குறித்து பட்ஜெட் விவாதத்தின்போது தீர்வு காணப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

மத்திய அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறும் போது 60 சதவீத பணத்துக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று விளக்கம் அளித்த அரசு, 60 சதவீத பணத்துக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என விளக்கம் அளித்தது.

இந்நிலையில் மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாய, பி.எப். மீதான வரி குறித்து அவையில் இருக்கும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜேட்லி, பட்ஜெட் மீதான விவாதத்தின் போது இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.