போபால் நீதிமன்றத்தில் ஆஜரானார் திக் விஜய் சிங்
மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த போது ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை இன்று போபால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.


மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த போது ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை இன்று போபால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
மத்தியப் பிரதேச தலைமைச் செயலக ஊழியர்களுக்கான தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில், வழக்குத் தொடர்பாக குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குற்றப்பத்திரிகையில், ஊழல் நடந்த போது மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த திக்விஜய் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளதால், அவரை பிணையில் வெளியே வர முடியாத பிரிவுகளில் கைது செய்ய சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
திக் விஜய் சிங் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அவரை நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு கைது செய்ய மத்தியப் பிரதேச காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அவர் இன்று போபால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...