பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அருணாசலப் பிரதேசம்: பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் கலிகோ புல்

அருணாசலப் பிரதேசத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் கலிகோ புல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

News image
Updated On :25 பிப்ரவரி 2016, 2:50 pm

அருணாசலப் பிரதேசத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் கலிகோ புல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அவருக்கு 40 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

அருணாசலப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததையடுத்து, அந்த மாநிலத்தின் 8-ஆவது முதல்வராக கலிகோ புல், கடந்த 19-ஆம் தேதி பதவியேற்றார்.

இந்நிலையில், அருணாசலப் பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை கூட்டவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் மாநில ஆளுநர் ஜோதிபிரசாத் ராஜ்கோவா உத்தரவிட்டார். இதையடுத்து இன்று பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

முகல்வர் கலிகோ புல்லுக்கு ஆதரவாக 27 காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர்களும், 11 பாஜக உறுப்பினர்களும், இரு சுயேச்சை உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

நேற்று வரை முன்னாள் முதல்வர் நபம் துகிக்கு ஆதரவு அளித்த 9 காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று முதல்வர் கலிகோவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் 17 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து முதல்வர் கலிகோ நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.