தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்னேப்டீல் ஊழியர் கடத்தலின் பின்னணி என்ன? போலீஸ் பரபரப்பு தகவல்

ஸ்னேப்டீல் நிறுவனத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவத்தில், ஒருதலைக் காதல் தான் காரணம் என்று காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Updated On :15 பிப்ரவரி 2016, 9:33 am

ஸ்னேப்டீல் நிறுவனத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவத்தில், ஒருதலைக் காதல் தான் காரணம் என்று காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காஸியாபாத் காவல்துறை அதிகாரி தர்மேந்திரா யாதவ் இது குறித்து கூறுகையில், ஸ்னேப்டீல் நிறுவனத்தின் செயற்குழு அதிகாரியாக இருக்கும் பெண் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவத்தில், அவரை ஒருதலையாகக் காதலித்த நபர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பனிபட்டைச் சேர்ந்த தேவேந்திரா என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடத்தலில் உதவி செய்ததாக உறவினர் ஒருவரையும் வழக்கில் சேர்த்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இதுவரை  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில், உள்ள பிரபல தனியார் ஆன்–லைன் வர்த்தக நிறுவனமான ‘ஸ்னாப்டீல்’–ன் நிறுவனத்தில் சட்டத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வரும் தீப்தி சர்னா, கடந்த 10–ந்தேதி மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது கடத்தப்பட்டார்.

ஆட்டோவில் வந்த 4 பேர் தீப்தியை கத்திமுனையில் கடத்திச் சென்றதாக புகார் பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து காசியாபாத் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீப்தியை தீவிரமாக தேட தொடங்கினர். மேலும் இது குறித்த தகவல் ஊடகங்களிலும் வெளியாகின. இதையடுத்து  அவர் கடந்த  வெள்ளிக்கிழமை வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.