தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சியாச்சினில் இருந்து 9 வீரர்களின் உடல்களையும் தில்லி கொண்டு வர தீவிர முயற்சி

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான 9 வீரர்களின் உடல்களையும் தில்லி கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News image
Updated On :13 பிப்ரவரி 2016, 11:12 am

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான 9 வீரர்களின் உடல்களையும் தில்லி கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராணுவ மீட்புக் குழுவின் கடும் முயற்சிக்குப் பின், சியாச்சின் மலையில் இருந்து மலை அடிவாரத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு 9 வீரர்களின் உடல்களும் இன்று கொண்டு வரப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பர்தாபுர் கிராமத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிக மோசமான வெப்பநிலை காரணமாக ஹெலிகாப்டர்களை இயக்க முடியாததால், உயிரிழந்த வீரர்களின் உடல்களை தில்லி கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

ஹெலிகாப்டர்கள் மூலம் உடல்களைக் கொண்டு வர வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மூன்று முயற்சிகளும் தோல்வி அடைந்தன.

இன்று பருவநிலை ஒத்துழைக்கும் பட்சத்தில், 9 வீரர்களின் உடல்களும் ஞாயிற்றுக்கிழமை லேஹ் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தில்லி கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.