தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்திய ராணுவத்தில் உளவாளியை ஏற்படுத்துமாறு ஐஎஸ்ஐ தலைவர் கூறினார்: டேவிட் ஹேட்லி

இந்திய ராணுவத்தில் உளவாளியை ஏற்படுத்துமாறு ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் மேஜர் இக்பால் தன்னிடம் கூறியதாக டேவிட் ஹேட்லி வாக்குமூலம் அளித்துள்ளார்.

News image
Updated On :13 பிப்ரவரி 2016, 6:20 am

இந்திய ராணுவத்தில் உளவாளியை ஏற்படுத்துமாறு ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் மேஜர் இக்பால் தன்னிடம் கூறியதாக டேவிட் ஹேட்லி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பை தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹேட்லி, அமெரிக்க சிறையில் இருந்தவாறு, இன்று 5வது நாளாக விடியோ கான்பரன்சிங் மூலமாக வாக்குமூலம் அளித்து வருகிறார்.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி டேவிட் ஹேட்லி இன்று அளித்த வாக்குமூலத்தில், இந்திய ராணுவத்தின் தென்பகுதி தலைமையகமான புனேவுக்குச் சென்று பார்வையிடுமாறு கூறினார்.

மேலும், இந்திய ராணுவத்தில் இருந்து கொண்டு நமக்குத் தகவல்களை அளிக்கும் வகையில் ஒரு உளவாளியை ஏற்படுத்துமாறும் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் மேஜர் இக்பால் வலியுறுத்தியதாகவும் ஹேட்லி தெரிவித்துள்ளார்.

அதே போல, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் யாரையாவது உளவாளியாக மாற்றி, அங்கிருந்து முக்கியத் தகவல்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் இக்பால் வலியுறுத்தியதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயில் மற்றும் சிவ சேனா பவனில் தான் ஆய்வு செய்ததாகவும், ஆனால், லஷ்கர் - இ - தொய்பா அமைப்பினரை, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருப்பதால் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் ஹேட்லி கூறியுள்ளார்.

அதோடு, லஷ்கர்-இ-தய்பா அமைப்பின் தளபதி ஹபீஸ் சயீத்தையும், செயல் தளபதி ஸாகிர் ரஹ்மானையும் சந்தித்ததை ஹேட்லி ஒப்புக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.