தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பனிச்சரிவில் உயிரோடு மீட்கப்பட்ட ராணுவ வீரர்: மருத்துவமனைக்கு விரைந்த மோடி, ராணுவ தளபதி

இந்தியாவின் எல்லையான சியாச்சின் பனிமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி கடந்த 6 நாட்களுக்குப் பிறகு உயிரோடு மீட்கப்பட்ட ராணுவ வீரரைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடியும், ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங்கும் ராணுவ மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

News image
Updated On :9 பிப்ரவரி 2016, 9:38 am

இந்தியாவின் எல்லையான சியாச்சின் பனிமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி கடந்த 6 நாட்களுக்குப் பிறகு உயிரோடு மீட்கப்பட்ட ராணுவ வீரரைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடியும், ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங்கும் ராணுவ மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பிறகு இன்று மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுஹந்தப்பா கோப்பாட் உடனடியாக விமானம் மூலம் தில்லி கொண்டு வரப்பட்டு, புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படாததால், மருத்துவமனைக்கு வந்த மோடியும், ராணுவ தளபதி தல்பீர் சிங்கும், சிகிச்சை அளித்து வரும் மருத்துவரிடம், ராணுவ வீரரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

பிப்ரவரி 3ம் தேதி சியாச்சின் மலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 10 வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த 6 நாட்களாக பனிச்சரிவில் சிக்கியிருந்த வீரரை இன்று மீட்புப் படையினர் உயிரோடு மீட்டது மிகுந்த ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.