/

உளவு பார்க்க 7 முறை இந்தியா வந்தேன்: மும்பை தாக்குதல் குறித்து டேவிட் ஹேட்லியின் பரபரப்பு வாக்குமூலம்

மும்பை தாக்குதலை நடத்த சதி திட்டம் தீட்டவும், உளவு பார்க்கவும் இந்தியாவுக்கு 7 முறை வந்துள்ளேன் என்று தீவிரவாதி ஹேட்லி கூறியுள்ளார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2016, 5:50 am

மும்பை தாக்குதலை நடத்த சதி திட்டம் தீட்டவும், உளவு பார்க்கவும் இந்தியாவுக்கு 7 முறை வந்துள்ளேன் என்று தீவிரவாதி ஹேட்லி கூறியுள்ளார்.

அமெரிக்க சிறையில் இருந்து தீவிரவாதி டேவிட் ஹெட்லி காணொலி காட்சி (விடியோ கான்பரன்சிங்) மூலமாக மும்பை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்து வருகிறார்.

அதில் பல அதிர்ச்சித் தகவல்களை ஹேட்லி வாக்குமூலமாக அளித்துள்ளார்.

அதில், நான் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன். இதுவரை 8 முறை இந்தியா வந்துள்ளேன். 2008 நவம்பர் 26ம் தேதி மும்பை தாக்குதலுக்கு முன்பு 7 முறை உளவு பார்க்கவும், தாக்குதல் நடத்த பிறகு ஒரு முறையும் இந்தியா வந்தேன்.

தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஹேட்லி அமெரிக்காவில் 35 ஆண்டு கால சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.