தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைய தடை: கேரள அரசு ஆதரவு

சபரிமலை கோயிலுக்குள் மாதவிலக்கு கால பெண்கள் நுழைவதற்கான தடையை ஆதரிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

PTI

சபரிமலை கோயிலுக்குள் மாதவிலக்கு கால பெண்கள் நுழைவதற்கான தடையை ஆதரிப்பதாக கேரளத்தை ஆளும் காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் மலைப் பகுதியில் அமைந்துள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்துவதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி இளம் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் இதுகுறித்து கேரள மாநில அரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்திருந்த மனுவில், சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு தடை என்பது மத ரீதியான பிரச்னை. அங்கு செல்லும் பக்தர்களின் மத வழிபாட்டு முறையை காப்பாற்றுவது ஓர் அரசின் கடமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

கடந்த 2007 ஆம் ஆண்டு, சபரிமலை கோயிலுக்குள் பெண்களும் சென்று வழிபடலாம் என முந்தைய கம்யூனிஸ்ட் அரசு தாக்கல் செய்திருந்த பிரமான பத்திரம் திரும்பப்பெறப்படுகிறது.

சபரிமலையை பொருத்தவரையில் அதன் நிர்வாக்தை திருவாங்கூர் தேவஸ்தான வாரியம், 1950 ஆம் ஆண்டைய திருவாங்கூர்-கொச்சி இந்து மத நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அந்த சட்டம், வழக்கத்தின்படி கோயில் வழிபாட்டு முறைகளை நடத்துவதுவதற்கு வாரியத்துக்கு சட்டபூர்வ அனுமதி வழங்குகிறது.

பல கோடி பக்தர்களின் நம்பிக்கை மற்றும் வழக்கத்தை இதுபோன்ற வழக்குகள் மூலம் மாற்ற முயலுவது முற்றிலும் தவறானது. எனவே, இந்த பொதுநலன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

சித்தாந்தங்களின் அடிப்படையில் யாரை அனுமதிப்பது என்பதை தீர்மானிப்பது என்பது மத வழிப்பாட்டு தலங்களுக்கான உரிமையாகும். இது அரசியல் சாசனம் 14-வது பிரிவு வழங்கியுள்ள சம உரிமைக்கு எதிராக உள்ளது என வழக்குத் தொடருவது என்பது ஒரு நோயாகவே உள்ளது.

சபரிமலையில் இருக்கும் கடவுள் ஐயப்பன் பூரண பிரமச்சாரியாக இருப்பதால், அங்கு இளம் பெண்கள் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவர்களை அனுமதித்தால் கடவுளின் பிரமச்சாரியம் பாதிக்கப்படும் என கேரள மாநில தலைமை செயலர் ஜிஜி தாம்சன் தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கை நீதிபதிகள் வருகிற 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.