தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மத்திய அரசின் உணவக பணியிடங்கள்: நேர்முக தேர்வு ரத்து

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் உணவகங்களில் காலியாகும் பணியிடங்களுக்கான தேர்வின் போது நேர்முக தேர்வு நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

PTI

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் உணவகங்களில் காலியாகும் பணியிடங்களுக்கான தேர்வின் போது நேர்முக தேர்வு நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார். மேலும் தேவைப்பட்டால் பணித்திறன் தேர்வு மட்டுமே நடைபெறும் என அறிவித்தார்.

இதன்படி மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 1,352 இடங்களில் இயங்கும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் காலியாகும் இடங்களுக்கான ஆள்கள் தேர்வின் போது நேர்முக தேர்வு நடத்தப்படமாட்டாது. என மத்திய பணியாளர் நலத்துறை அறிவித்துள்ளது. தேவைப்பட்டால், பணித்திறன் தேர்வு மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.