தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அடுத்த வாரம் தில்லி போறீங்களா? முகல் தோட்டத்தைப் பார்க்கலாம்

துலீப் மற்றும் பிரிமுலா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகல் கார்டன் வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12ம் தேதி) பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட உள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

PTI

துலீப் மற்றும் பிரிமுலா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகல் கார்டன் வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12ம் தேதி) பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட உள்ளது.

உலகப் புகழ்பெற்ற முகல் கார்டன், பொதுமக்கள் பார்வைக்கு பிப்ரவரி 12ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை (பராமரிப்புக்காக திங்கட்கிழமைகள் தவிர)  காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்து வைக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள ஆன்மிகத் தோட்டம், மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம், இசைத் தோட்டம் ஆகியவையும் வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையின் 35வது வாயில் வழியாக பொதுமக்கள் தோட்டத்துக்குள் செல்லவும், வெளியேறவும் அனுமதிக்கப்படுவார்கள்.

இங்கு வரும் பொது மக்கள் குடிநீர் கேன்கள், சூட்கேஸ், கைப்பை, மகளிர் பர்ஸ், கேமரா, ரேடியோ, டிரான்சிஸ்டர், பெட்டிகள், குடைகள், உணவு பொருட்கள் என எதையும் கொண்டு வரக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் கொண்டு வரும் எந்த பொருளும் நுழைவு வாயிலேயே தடுத்து வைக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மார்ச் 20ம் தேதி விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்புப் படையினர், தொழிற்படையினர், தில்லி காவல்துறையினர் ஆகியோருக்கான சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகல் தோட்டத்தில் 12 ஆயிரம் துலீப் மலர்கள், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களிலும், சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் கலந்தும் மலர்ந்து, பொதுமக்கள் கவரும் வகையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.