தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சியாச்சின் பனிச் சரிவு: 10 வீரர்களும் இறந்திருக்கலாம்?

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் மலைப் பகுதியில் ரோந்து சென்றபோது பனிச் சரிவில் சிக்கிய 10 வீரர்களும் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என ராணுவம் கூறியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:26 pm

PTI

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் மலைப் பகுதியில் ரோந்து சென்றபோது பனிச் சரிவில் சிக்கிய 10 வீரர்களும் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என ராணுவம் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், இமயமலைத் தொடரில் 19,600 அடி உயரத்தில் சியாச்சின் ராணுவ நிலை அமைந்துள்ளது. இது உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள ராணுவ நிலையாகும். இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரிஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ஒர் அதிகாரியும் ஒன்பது வீரர்களும் நேற்று காலை சியாச்சின் பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது, திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.

இரண்டாவது நாளாக இன்றும் பனியில் புதையுண்ட வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பகல் நேரத்தில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸும், இரவில் மைனஸ் 42 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை நிலவுகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணுவத்தினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், மாலை வரை எவ்வித முன்னேற்றமுமில்லை.

இதனிடையே ராணுவ வீரர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உதவியை மறுத்த இந்தியா

இந்திய ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கிய 30 மணி நேரத்துக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி அமிர் ரியாஸ் இந்திய அதிகாரி ரன்பீர் சிங்கை தொடர்பு கொண்டு மீட்புப் பணியில் உதவுவதாக கூறினார்.

எனினும், பாகிஸ்தான் உதவியை ஏற்றுக் கொள்ள இந்தியா மறுத்துவிட்டது. ஏற்கெனவே தேவையான உபகரணங்களுடன் ராணுவ வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா பாகிஸ்தானிடம் கூறிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.