தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஆதர்ஷ் வழக்கு: அசோக் சவானை சிபிஐ விசாரிக்க ஆளுநர் அனுமதி

ஆதர்ஷ் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அசோக் சவானிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு அம்மாநில ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:26 pm

PTI

ஆதர்ஷ் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அசோக் சவானிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு அம்மாநில ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.

ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், அந்த மாநில காங்கிரஸ் தலைவருமான அசோக் சவாண் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, ஆதர்ஷ் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, அசோக் சவாணிடம் விசாரணை நடத்துவதற்கு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அனுமதி கோரியிருந்தது.

இதுகுறித்து மாநில அரசின் கருத்தைக் கேட்டு, முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடிதம் எழுதினார்.

இதையடுத்து, அசோக் சவாணிடம் விசாரணை நடத்துவதற்கு சிபிஐக்கு அனுமதியளிக்கும்படி ஆளுநருக்கு மாநில அரசு பரிந்துரை செய்ததையடுத்து, ஆளுநர் இன்று அனுமதி அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.