டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கல்வி நிலையத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவு: 100 பேர் வாந்தி, மயக்கம்!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஒன்றில் நேற்று இரவு வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்ட  மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 100 பேர்...

News image
Updated On :26 டிசம்பர் 2016, 9:01 am

மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஒன்றில் நேற்று இரவு வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்ட  மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் புகழ்பெற்ற அலீகார் முஸ்லீம்  பல்கலைக்கழகத்தின் கிளை கல்வி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.   

இதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 100 பேர் பெரிந்தல்மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 26 பேர் இன்று காலை வீடு திரும்பினர். மற்றவர்கள்  இன்னும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆயினும் அவர்கள் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கல்வி நிலைய நிர்வாகம் இது குறித்து  தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.