புணே
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட 42 வயது மருத்துவர், தான் இதுவரை 6 பேரை கொலை செய்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அங்கன்வாடி ஊழியரான மங்கலா ஜேதி (47) கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர், இது தொடர்பாக டாக்டர் சந்தோஷ் போல் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் 6 கொலைகளை செய்திருப்பதாகவும், அதில் 4 பேர் பெண்கள் என்றும் கூறியுள்ளார்.
அவர்களது உடல்களை, தனது பண்ணை வீட்டிலேயே புதைத்துவிட்டதாகவும் அவர் கொடுத்த தகவலின்பேரில் 5 உடல்கள் கைப்பற்றப்பட்டது.
தகாத உறவு மற்றும் தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடிக்கவும் இந்த கொலைகளை தான் செய்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.