பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

தில்லியில் வேகமாகக் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவன் மீது வழக்கு

தில்லியில், 17 வயது சிறார் ஒருவர் அதிவேகமாகக் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார். இதையடுத்து, அவர் மீது மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :9 ஏப்ரல் 2016, 10:39 am

புது தில்லி : தில்லியில், 17 வயது சிறார் ஒருவர் அதிவேகமாகக் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார். இதையடுத்து, அவர் மீது மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம், தில்லியில் மிக வேகமாகக் காரை ஓட்டி, சாலையைக் கடந்தவர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டதில், விபத்தை ஏற்படுத்திய மெர்சிடிஸ் காரை 17 வயது சிறார் ஓட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

அவர் மீது மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் (304) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர் விசாரணையில், அந்த சிறுவன் ஏற்கனவே, சாலை விதி மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், இதேப்போன்று ஒரு சாலை விபத்தை அச்சிறுவன் நிகழ்த்தியிருப்பதும், பாதிக்கப்பட்டவர் வழக்குப் பதிவு செய்யாததும், ஏற்கனவே அதிக வேகமாக காரை இயக்கியதற்காக 2 முறை அபராதம் செலுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.