மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

தில்லியில் வேகமாகக் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவன் மீது வழக்கு

தில்லியில், 17 வயது சிறார் ஒருவர் அதிவேகமாகக் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார். இதையடுத்து, அவர் மீது மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:59 pm

PTI

புது தில்லி : தில்லியில், 17 வயது சிறார் ஒருவர் அதிவேகமாகக் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார். இதையடுத்து, அவர் மீது மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம், தில்லியில் மிக வேகமாகக் காரை ஓட்டி, சாலையைக் கடந்தவர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டதில், விபத்தை ஏற்படுத்திய மெர்சிடிஸ் காரை 17 வயது சிறார் ஓட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

அவர் மீது மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் (304) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர் விசாரணையில், அந்த சிறுவன் ஏற்கனவே, சாலை விதி மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், இதேப்போன்று ஒரு சாலை விபத்தை அச்சிறுவன் நிகழ்த்தியிருப்பதும், பாதிக்கப்பட்டவர் வழக்குப் பதிவு செய்யாததும், ஏற்கனவே அதிக வேகமாக காரை இயக்கியதற்காக 2 முறை அபராதம் செலுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.